Friday, June 12, 2009

தமிழ்த்தேசியம் - அறிமுகம்

தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை

விவாதங்கள் - ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன

நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வருகின்ற சூலை 12 2009 இல் திருச்சியில் நடத்தவிருக்கும் "தமிழ்த் தேசியம்" சிறப்பு மாநாட்டிற்கான வரைவு அறிக்கை இது. தோழமை அமைப்புகள் மற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் உணர்வாளர்கள் பங்குபெறவிருக்கும் இம்மாநாட்டில் இறுதி செய்யப்படவிருக்கும் இவ்வறிக்கையின் மீது விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றை tamizhdesiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 'தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 44/1, பசனை கோயில் தெரு, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17.' என்ற முகவரிக்கும் உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.


இந்த விவாதங்கள்/ஆலோசனைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வலைப்பதிவில் ”தமிழ்த்தேசியம்” குறித்த வரைவு அறிக்கை குறித்த கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம்.

நன்றி..!


1 comment:

  1. ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்? : சபா நாவலன்
    http://inioru.com

    ReplyDelete